
கோவில்பட்டி: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் ஏ.டி.மரிய கிளாட் அமர்வு, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைப்பது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.