
சண்டீகர்: பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக பஞ்சாப் மாநிலத்தில் ஜஸ்பிர் சிங் என்ற யூடியூர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இவர், 1.1 மில்லியன் சந்தாதாரர்களுடன் ‘ஜான் மஹால்’ என்ற யூடியூப் சேனலை, நடத்தி வந்தார்.
ரூப்நகர் மாவட்டத்தில் மஹ்லான் கிராமத்தில் வசித்து வரும் ஜஸ்பிர் சிங், மொஹாலியை அடிப்படையாகக் கொண்ட மாநில சிறப்பு நடவடிக்கை பிரிவினரால் (State Special Operations Cell) கைது செய்யப்பட்டுள்ளார்.