• June 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது அரை நிரந்தர கட்டமைப்புகளை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் 30ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *