
புதுடெல்லி: ட்ரோன்கள் மூலம் ரயில் பெட்டி களை சுத்தம் செய்வது குறித்து ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளதாவது: ட்ரோன்கள் மூலம் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சி முதல் முறையாக சோதனை அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் அசாமின் காமக்யா ரயில் நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அங்கு எளிதில் செல்ல முடியாத ரயில் மற்றும் நடைமேடைகளின் பகுதிகளை சுத்தம் செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மிகவும் வலுவான செயல்திறன் மற்றும் துல்லியத்தன்மையுடன் அதன் பணிகள் அமைந்திருந்தன. யாரும் எளிதில் நுழைந்து சுத்தம் செய்ய முடியாத இடங்களை ட்ரோன்கள் எளிதாக அணுகி தூய்மைப்படுத்தி விடுகின்றன.