
எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை, தினமணி கதிரில் எழுதிய தொடர்கதை ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’. இந்தக் கதை புத்தகமாக வந்தபிறகு அதே பெயரில் திரைப்படமாக இயக்கினார், எஸ்.பி.முத்துராமன். திரைக்கதை, வசனத்தை புஷ்பா தங்கதுரை எழுதினார். ரம்யா சினி ஆர்ட்ஸ் சார்பில் சங்கரன் தயாரித்தார். இதில் கமல்ஹாசன், சுஜாதா, விஜயகுமார், விஜயலட்சுமி, விஜயகீதா, திலக் என பலர் நடித்தனர். பாபு ஒளிப்பதிவு செய்தார்.
சுஜாதாவும், கமல்ஹாசனும் காதலர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் ஒரு மோதலில் கமல்ஹாசனுக்கு ஆறுவருட சிறைத் தண்டனை கிடைக்கிறது.