• June 4, 2025
  • NewsEditor
  • 0

சென்​னை: தமிழகத்​தில் ஊரக மற்​றும் நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் அளிக்​கும் சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ரவி ஒப்​புதல் அளித்​துள்​ளார். இதன்​மூலம், மாற்​றுத் திற​னாளி பிர​தி​நி​தி​கள் விரை​வில் நியமிக்​கப்பட உள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வை​யின் பட்​ஜெட் கூட்​டம் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடை​பெற்​றது. இதில் துறை​வாரி​யான மானிய கோரிக்கை மீதான விவாதங்​கள் மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்​.29-ம் வரை நடை​பெற்​றது.

இந்த கால​கட்​டத்​தில், நிதி மசோ​தாக்​கள், கலைஞர் பல்​கலைக்​கழகம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களில் பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கு​வது, கடன் நிறு​வனங்​களின் வலுக்​கட்​டாய நடவடிக்​கை​களில் இருந்து பொது​மக்​களை பாது​காப்​பது உட்பட 18 சட்ட மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டு, ஆளுநர் ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *