
‘‘இழப்புகள் முக்கியம் அல்ல, முடிவுகள்தான் முக்கியம்’’ என ஆபரேஷன் சிந்தூர் குறைபாடுகள் குறித்து முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கருத்து தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் சேதம் அடைந்ததாக பல தகவல்கள் வெளியாயின. எத்தனை போர் விமானங்கள் சேதம் அடைந்தன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் சவுகான் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘இந்திய விமானப்படையின் 6 விமானங்களை சுட்டு வீழத்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு. சில விமானங்கள் சேதம் அடைந்தன. எத்தனை விமானங்கள் சேதம் அடைந்தன என்பது முக்கியம் அல்ல. கடந்த மே 7-ம் தேதி தாக்குதலுக்கு பின் தவறுகளை சரிசெய்து, மே 10-ம் தேதி அன்று பாகிஸ்தானுக்குள் 300 கி.மீ சென்று விமானப்படை தளங்களை துல்லியமாக தாக்கினோம்.’’ என்றார்.