• June 4, 2025
  • NewsEditor
  • 0

2025-ம் ஆண்டின் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது பெங்களூரு அணி. 18வருட கனவை நிறைவேற்றியிருக்கிறது பெங்களூரு அணி. வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ” அடுக்கடுக்கான சப்ரைஸ்களை வைத்து இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனை த்ரில்லாக முடித்து வைத்திருக்கிறீர்கள். பெங்களூரு அணியினர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். விராட் கோலி இந்த கனவை நீங்கள் பல வருடங்களாக சுமந்திருக்கிறீர்கள்.

இன்றைய இரவு அந்த கிரீடம் உங்களுக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறது. அடுத்த ஆண்டு சென்னை அணியின் வலுவான கம்பேகை எதிர்பார்க்கிறேன்.” எனப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின், ” பெங்களூரு அணி முதல் IPL பட்டத்தைப் பெற்றதற்கான வாழ்த்துகள். 18வது சீசனில் 18வது ஜெர்சி எண் கோப்பையை உயர்த்துவது சரியானது. நன்றாக விளையாடினார்கள்! பஞ்சாப் அணி நன்றாக போராடிய பருவத்திற்கு வாழ்த்துகள்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *