
சென்னை: தமிழகத்தில் குருப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தேவைப்படும் அலுவர்கள், ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். இதற்காக குருப்-1, குருப்-2, குருப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.