
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அத்தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது: