
சென்னை: தமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறாமல் , தெற்கு ரயில்வே பிரச்சினையை மூடி மறைக்கவே முயல்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ரயில் வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்பட்டது குறித்து, தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர், ரயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கம் திட்டங்கள் குறித்த பொதுவான கொள்கையாகும். நான் எழுப்பியது பொதுமேலாளருடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்ட விபரங்கள் சார்ந்தது.