• June 3, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் இன்று (ஜுன் 3) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அலுவலகத்துக்கு உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம், மே.30ம் தேதி மாதாந்திர மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த முகாமின் போது மத்திய அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரானது கூட்டம் நடக்கும் பொழுது அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்க வலியுறுத்தியும் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆட்சியார் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *