
சென்னை: “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும்…’ என்று தலைப்பிட்டு வீடியோ பதிவு ஒன்றில் விவரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது: “2024-ம் ஆண்டு டிச.23-ம் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு மிக மோசமான, கோரமான பாலியல் வன்கொடுமை நடந்தது. அந்தச் சம்பவம் நடந்த பிறகு, 25-ம் தேதி ஒரு குற்றவாளியை கைது செய்தனர். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், ஜனவரி மாத இறுதியில் நான் சில விஷயங்களை, சிடிஆர் (Call details record) அடிப்படையில் உங்கள் முன்பு தெரிவிப்பதாக கூறியிருந்தேன். அதைப் பேச வேண்டிய நேரம் இன்று வந்துவிட்டது.