• June 3, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் வலுப்படுத்தும் மற்றும் புனரமைப்பு பணியை நீர்வளத்துறை நீர் ஆய்வு நிறுவனம் மற்றும் நீரியியல் தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று (ஜூன் 3) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்கவும், வெள்ள நீரை சேமித்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் மேட்டூர் அணை கட்டப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீரை வெளியேற்ற 16 கண் மதகு அமைக்கப்பட்டு, வெள்ள உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றும் வகையில் வடிவமைத்து கட்டப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், 16 கண் பாலத்தை வலுப்படுத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *