
போபால்: “முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தும்போது ராகுல் காந்தி தனது காலணிகளை கழற்றாதது எனக்குப் பிடிக்கவில்லை” என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், “மக்களவை எதிர்க்கட்சி தலைவர் வருகை குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவர் தனது பாட்டி இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தும்போது தனது காலணிகளை கழற்றாதது எனக்குப் பிடிக்கவில்லை. இது நமது கலாச்சாரத்துடன் ஒத்துப்போகவில்லை” என்று தெரிவித்தார்.