• June 3, 2025
  • NewsEditor
  • 0

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனையை நடத்தி வந்தார். இந்த மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு பல் வலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அடுத்த 6 மாதங்களில் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில், கடைசியாக உயிரிழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம்குமார் என்பவர் தனது தாயார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனியார் பல் மருத்துவமனையில் தன் தாயாருடன் சிகிச்சை பெற்று வந்த 8 பேரும் உயிரிழந்ததால் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை, காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *