• June 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படாதது மற்றுமொரு ராஜதந்திர குளறுபடி” என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே "மத்தியஸ்தம்" செய்ய அமெரிக்காவை அனுமதித்த "தவறு"க்குப் பிறகு இந்த ராஜதந்திர குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் ஜி7 உச்சி மாநாடு இம்முறை ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில் நடைபெற உள்ளது. இதில், ரஷ்யா – உக்ரைன் உள்பட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு கனடா அழைப்பு விடுக்கவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளன. ஒருவேளை, கனடா இனி அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும், அதில் பங்கேற்பதற்கான அடிப்படை வேலைகளை மேற்கொள்ள போதுமான காலம் இல்லாததால் பிரதமர் மோடி, மாநாட்டை தவிர்ப்பார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *