
புதுடெல்லி: நோயாளிகளின் நலன்களைக் காக்கவும், நெறிமுறைகள் சார்ந்த தரத்தை கடைபிடிக்கவும், மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை மருத்துவப் பிரதிநிதிகள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்தும் அனைத்து மருத்துவனைகளிலும், மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவமனை பிரதிநிகள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து டிஜிஹெச்எஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், "இந்த உத்தரவு, மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவப் பிரதிநிதிகளை அனுமதிக்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவு தொடர்பானது. இதன்படி, மருத்துவமனை வளாகத்துக்குள், மருத்துவப் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்படுகிறது.