
சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூரை கேலி செய்யும் விதமாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசிய கருத்தானது பெரும் அரசியல் சர்ச்சையை தூண்டியுள்ளது. அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்ததாக பாஜக தெரிவித்துள்ளது.
லூதியானாவில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்கு சேகரிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், "ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்குகளை கோருகிறது. அவர்கள் 'சிந்தூர்' என்பதை நகைச்சுவையாக மாற்றியுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சிந்தூர் (குங்குமம்) அனுப்புகிறார்கள். இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் 'சிந்தூர்' பயன்படுத்துவீர்களா? இது 'ஒரே நாடு, ஒரே கணவர்' திட்டமா?" என்று கேள்வியெழுப்பினார்