• June 3, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்பதை கண்டுபிடிக்க காவல் துறை தவறியுள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

மதுரை திருப்பங்குன்றத்தில் இம்மாதம் 22ம் தேதி பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. அதையொட்டி, விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் சூலக்கரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “இந்த மாநாட்டில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திலிருந்து 20 ஆயிரம் பேரும், மேற்கு மாவட்டத்திலிருந்து 16 ஆயிரம் பேரும் பங்கேற்க வேண்டும். மற்ற மாவட்டங்களைவிட விருதுநகர் மாவட்டத்திலிருந்து அதிகமானோர் பங்கேற்பர். விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெறும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *