• June 3, 2025
  • NewsEditor
  • 0

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சி சிறைச்சாலையில் சுமார் 700 முதல் 1000 கைதிகள் அவர்களது சிறை அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதான வாயிலின் அருகில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.

அந்தக் கைதிகளில் ஒரு குழுவினர் காவலர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வெடித்த வன்முறையில் அந்தக் கைதிகள் காவலர்களின் ஆயுதங்களைக் கைப்பற்றி தப்பிச் செல்ல முயற்சித்திருக்கின்றனர்.

இதில், இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு கைதி பலியாகியுள்ளார். மேலும், 4 பாதுகாப்பு வீரர்கள் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பல்வேறு முக்கிய குற்றவழக்குகளில் கைதான 200க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் அங்கிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கராச்சி நகரம் முழுவதும் தற்போது உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *