
கோவை: கோவை கிராம ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, குப்பை பிரச்சினைகள் குறித்து ‘வாட்ஸ் அப்‘ மூலம் புகார் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பழுது மற்றும் குப்பைகள் அகற்றாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், மக்கள் எளிதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் புகார் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.