• June 3, 2025
  • NewsEditor
  • 0

புனே: “இந்தியாவை ஆயிரம் வெட்டுக்களால் ரத்தம் சிந்த வைக்க துடிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது” என்று முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

புனே நகரில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜெனரல் அனில் சவுகான், "ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, ஆரம்ப கட்டத்தில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை நான் குறிப்பிட்டிருந்தேன். நமது தரப்பு இழப்புகள் குறித்து என்னிடம் கேட்டபோது, அதை தெரிவித்தேன். அதேநேரத்தில், இழப்புகள் முக்கியமல்ல, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதே முக்கியம் என்றும் நான் சொன்னேன். போரில், பின்னடைவுகள் இருந்தாலும், நீங்கள் உங்கள் மன உறுதியைப் பராமரிக்க வேண்டும். இழப்புகள் முக்கியமல்ல, ஆனால் விளைவுகள் முக்கியம். போர் என்று வரும்போது, அதனுடன் அரசியல் உட்பட பல்வேறு கூறுகள் இணைந்தே வரும். ஆபரேஷன் சிந்தூரிலும், போரும் அரசியலும் இணைந்தே இருந்தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *