
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த விவாகரம் தொடர்பாக இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.