
கவுகாத்தி: அசாம் எம்.பி.யும், முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகனுமான கவுரவ் கோகோய் அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இன்று முறையாக பொறுப்பேற்றார். கவுகாத்தியில் உள்ள கட்சி தலைமையகமான ராஜீவ் பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அசாம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, கவுரவ் கோகோய் ராஜீவ் பவனுக்கு முதல் முறையாக வருகை தந்தார். இந்த நிகழ்வுக்கு முன்னர், அவர் காலையில் காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். மூத்த தலைவர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட அசாம் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் ஆதரவாளர்கள், புதிய மாநிலத் தலைவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.