• June 3, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் இருவரை இன்று மீட்கப்பட்டனர். இதனிடையே, கடற்கரை கற்களில் சிக்கிய ஒடிசா நபரை போலீஸார் மீட்டனர்.

புதுவை கடல் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை கடலில் தோன்றக்கூடிய பெரிய அலைகள் குளிப்பவர்களை கடலுக்குள் இழுத்து சென்று விடுகிறது. இதனால் கடல் அழகை ரசித்து குளிக்கும் சுற்றுலா பயணிகள் பலர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து புதுவை கடற்கரைகளில் ஆபத்தான கடல் பகுதி, குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி, சுற்றுலா வரும் இளைஞர்கள் தொடர்ந்து குளித்து வருகின்றனர். அப்போது கடல் அலைகளில் சிக்குபவர்களை காப்பாற்ற சுற்றுலா கடலோர பாதுகாவலர்கள் (லைப் கார்டு) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடல் அலையில் சிக்கியவர்களை காப்பாற்றி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *