
புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காததால் புதுச்சேரிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆகஸ்ட்டில் புதுச்சேரியில் நடக்கும் விழாக்களில் பங்கேற்க பிரதமர் மோடி வரவுள்ளார் என்று சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார்.
புதுவை பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: "தவளகுப்பத்தில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இத்தகவல் கிடைத்தவுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3.50 லட்சம் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீஸார் 3 பேர் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.