• June 3, 2025
  • NewsEditor
  • 0

தென்னாப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெர்ன்ட் கெப்பல் என்ற தொழிலதிபரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 30ஆம் தேதியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. செஸ்ஃபோன்டைன் (Sesfontein )பகுதியில் உள்ள ஹோனிப் ஸ்கெலிட்டன் கோஸ்ட் கேம்ப் அருகே தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கழிப்பதற்காக, ஒரு விடுதியில் கெப்பல் தங்கியிருக்கிறார்.

சிங்கம்

அப்போதுதான் இந்த கொடிய தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெடிஷிபாண்டா ஹமுனியேலாவின் அறிக்கையின்படி, கழிப்பறையைப் பயன்படுத்த கெப்பல் தனது அறையில் இருந்து வெளியே வந்தபோது சிங்கம் அவரைப் பதுங்கியிருந்து தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

நமீபிய காவல்துறை சார்பில் இந்த சம்பவம் தொடர்பான முழு அறிக்கையும் விரைவில் விசாரணை நடத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த பகுதி, மலைப்பகுதிகளில் சுற்றித் திரியும் பாலைவன சிங்கங்களின் எண்ணிக்கைக்கு பரவலாக அறியப்படுவதாகவும், 2023 புள்ளிவிவரங்களின்படி, சுமார் 60 பெரிய சிங்கங்களும் அதை குட்டிகளும் இப்பகுதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *