
சென்னை: வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடம் கஸ்தூரிபா கன்யா குருகுல கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்துக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டதாக அக்கல்வி நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சொக்கலிங்கம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.