
பெங்களூரு: கமல் ஹாசனின் கன்னடம் குறித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர் தாக்கல் செய்த மனு ஒன்றினை விசாரித்த உயர்நீதிமன்றம், "நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?" என்று கடுமையாக சாடியுள்ளது.
வரவிருக்கும் தனது புதிய படமான தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதையும், திரையிடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கமல் ஹாசன் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையின் போது உயர் நீதிமன்றம் கமல்ஹாசனை இவ்வாறு சாடியுள்ளது.