• June 3, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்களை (மைக்ரோ ஃபைனான்ஸ்) தணிக்கை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் மன்றம் சார்பில் தர்ணா போராட்டம் இன்று (ஜூன் 3) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "தமிழ்நாட்டில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆர்பிஐ வழிகாட்டுதல் படி பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட கூலி, மகளிர் உரிமைத் தொகை ஆகியவற்றை எடுக்க முடியாமல் முடக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து புலனாய்வு செய்ய பழங்குடி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *