
சண்டீகர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ நடமாட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் பஞ்சாப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பஞ்சாப் மாநிலம், தார்ன் தரனிலுள்ள மொஹல்லா ரோடுபூரில் வசிக்கும் ககன்தீப் சிங் என்ற ககன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ -உடன் தொடர்பில் இருந்ததாகும், தகவல்களைப் பரிமாற பணம் பெற்றதாகவும், பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.