
சென்னை: வட சென்னை கொடுங்கையூரில் செயல்படுத்த உள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் தண்டையார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினருக்கான மயான பூமி திட்டத்தை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். வடசென்னை,கொடுங்கையூரில் குப்பை எரிஉலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும். கொடுங்கையூர் – மணலி சாலை மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் தண்டையார்பேட்டை அஞ்சலம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.