
திருநெல்வேலி: தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.
நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் திருநெல்வேலி மண்டல அளவிலான உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற வாகை சந்திரசேகர் கூறியதாவது: