
ஒடிசாவில் மாவோயிஸ்ட்களால் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 2.5 டன் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர்.
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒடிசா காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை, ஜாகுவார் படை, சிஆர்பிஎப் மற்றும் மாவட்ட தன்னார்வ படை அடங்கிய கூட்டுப்படையினர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2.5 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கைப்பற்றினர்.