
விழுப்புரம்: ‘பாமகவில் அனைத்து அதிகாரங்களும், கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது’ என முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாசை, பாமக முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் நேற்று சந்தித்தார்.