
மறைமலைநகரில் வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்து அமைந்துள்ளது மறைமலை நகர் நகராட்சி. சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற இந்நகராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஏராளமான கடைகளும் வணிக நிறுவனங் களும், தொழிற் சாலைகளும் உள்ளன. மறைமலைநகர் என்எச்-1 பகுதியில் உள்ள பாவேந்தர் சாலையில் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தேவாலயத்தில் தினமும் காலை 6.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி, காலை 8 மணி, காலை 10.30 மணி ஆகிய 3 நேரங்களிலும் திருப்பலி ஆராதனை நடைபெறும். இதில் பங்கேற்க தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.