
திருநெல்வேலி: “தமிழகத்தில் திருவிழா இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் மண்டல அளவிலான நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், அப்துல்வகாப் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.