
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா சமயத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை பாஷா சங்கம், மத்தியக் கலாச்சாரத் துறை, சென்னையின் சிஐசிடியுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. இதில், உத்தரப் பிரதேசத்தின் தமிழ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை, வாரணாசியின் காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்தார். மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) வெளியீடான அதன் அறிமுக விழாவும் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றித் துவக்கப்பட்ட விழாவில் திருவள்ளுவரின் சிறிய உருவச் சிலையும், இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலும் சிஐசிடி சார்பில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன. உ.பி.யில் திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்முதலில் கோரிய பாஷா சங்கத்தின் பொதுச் செயலாளரான மறைந்த கே.சி.கவுடுவின் மனைவி ரேகா கவுரை விருந்தினர்கள் பாராட்டி விழாவில் கவுரவித்தனர்.