• June 2, 2025
  • NewsEditor
  • 0

சாலையில் நடந்த வாக்குவாதத்தின்போது ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண், மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

“We Really Love Bengaluru”

“நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள், நான் கர்ப்பமாக இருக்கிறேன். கரு கலைந்துவிடுமோ என்ற பயத்தில் அப்படிப் பேசிவிட்டேன். எனக்கு உண்மையாகவே பெங்களூரூவைப் பிடிக்கும். கன்னட மொழியையும் கன்னடர்களையும் பிடிக்கும். எங்களுக்கு பெங்களூரூவின் கலாசாரம் பிடிக்கும்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

மேலும், “அனைத்து கன்னடர்களும் எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் ஆட்டோ ஓட்டுநர்களை மதிக்கிறோம். எங்களுக்கு பெங்களூரூ மிகவும் விருப்பமானது.” என்றும் கைகளை வணங்கி பேசியுள்ளார்.

அந்த வட இந்தியப் பெண்ணும் அவரது கணவரும், கன்னட மொழியிலும் மன்னிப்புக் கேட்க வற்புறுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து சுற்றியிருந்தவர்கள் கன்னடம் சொல்லித்தர அதைக் கேட்டு அந்த மொழியிலேயே மன்னிப்பும் கேட்டனர்.

பின்னணி என்ன?

பெங்களூரூவில் உள்ள பெல்லந்தூர் பகுதியில், சனிக்கிழமை மாலை சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராரில் அந்த பெண் ஆட்டோ ஓட்டுநரை அடித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ் காவல்துறையில் அளித்துள்ள புகாரின்படி, சாலையில் லோகேஷ் வலதுபுறம் இருந்தும் அந்தப் பெண் இடதுபுறமிருந்தும் வந்துள்ளனர். பாதை இணையும் இடத்தில் லோகேஷின் ஆட்டோவும், அந்த பெண்ணின் இரு சக்கர வாகனமும் மிக நெருக்கமாக சென்றிருக்கிறது.

வாகனங்கள் இடித்துக்கொள்ளவில்லை என்றாலும் அந்தப் பெண் லோகேஷை சரமாரியாக கத்தவும் திட்டவும் தொடங்கியுள்ளார். லோகேஷ் இதனை மொபைலில் ரெக்கார்ட் செய்ய முயன்றபோது அவரை காலணியால் தாக்கியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *