
தேன்கனிக்கோட்டை பகுதி கிராமங்களில் தகவல் பலகைகளில் ஊர் பெயர் மற்றும் தெரு பெயரை தமிழில் எழுத வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் பாகலூர், பேரிகை உள்ளிட்ட கிராமங்கள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ளன. இப்பகுதி மக்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அதேபோல, அரசுப் பள்ளிகளிலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பள்ளிகளும் இயங்கி வருகின்றன.