
குவஹாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் 15 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 29-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமாக உள்ள நிலையில், மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.