• June 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்தியாவில் இன்று (ஜூன் 2, 2025) காலை 8 மணி நிலவரப்படி, 3,961 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 3,961 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் 203 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நேற்று டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா இறப்புகள் 32 ஆக அதிகரித்துள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *