• June 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் நடை​பெறும் புதிய, இரட்டை பாதை என 9 திட்​டங்​களுக்கு மத்​திய பட்​ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்ட நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்​பி​யுள்​ளது. இது, மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மத்​திய பட்​ஜெட்டில் தமிழகத்​தில் ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதன்படி, தெற்கு ரயில்​வே​யில் தமிழகம், கேரளத்​தில் நடை​பெறும் 12 திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.727.79 கோடி நிதியை பல்​வேறு காரணங்​களை முன்​வைத்து தெற்கு ரயில்வே திருப்பி அனுப்​பி​யுள்​ளது.

இதில் தமிழகத்​தில் நடை​பெறும் 9 திட்​டங்​களுக்கு ஒதுக்​கிய நிதி​யும் அடங்​கும். 3 இரட்​டை, அகலப் பாதை திட்​டத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.400 கோடி, 6 புதிய பாதை திட்​டத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.247 கோடி நிதி​யும் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளன. இது​போல, கேரளா​வில் 3 திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நிதி​யை​யும் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளது. திண்​டிவனம் – திரு​வண்​ணா​மலை (வழி:செஞ்​சி), அத்​திப்​பட்​டு- புதூர் ஆகிய 2 புதிய ரயில் பாதை திட்​டங்​கள் ஏற்​கெனவே நிறுத்தி வைக்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *