
கள்ளக்குறிச்சி: பூம்புகாரில் ஆக. 10-ம் தேதி வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். அதேநேரத்தில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவீர்களா என்ற கேளவிக்கு மழுப்பலான பதிலையே கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழாவை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் எனது தலைமையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி மாநாட்டுக் குழுவுக்கு தலைவராக செயல்படுவார். மிகச் சிறப்பான முறையில் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள்.