• June 2, 2025
  • NewsEditor
  • 0

இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிலர் நேரில் சந்தித்தும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நன்றி தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இளையராஜா, “எனக்கு பிறந்த நாள் கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து கூறிக் கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 

இளையராஜா

பிறந்த நாள் வாழ்த்து கூற பல இடங்களில் இருந்து வெகு தூரத்தில் இருந்து சிரமப்பட்டு என்னை பார்க்க ரசிகர்கள் வந்துள்ளனர். ரசிகர்களை பார்த்ததும் வாயடைத்து போகிறேன். வாயில் வார்த்தைகள் வரவில்லை. வாழ்க் வளமுடன் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியையும் சொல்லி இருக்கிறார். லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை, அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழ்நாட்டில் இசைக்க போவதாக ‘இசைஞானி’ இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

இளையராஜா
இளையராஜா

“என்னுடைய மக்கள் அந்த சிம்பொனி இசையை கேட்டாக வேண்டும். உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்தப் போகிறேன், இந்த இனிய செய்தியை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்” என்று இளையராஜா கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *