• June 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார். சென்னை உத்தண்டியில் பாமகவின் 8 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்றும் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது முக்கியமில்லை வெற்றி பெற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளிலும் கணிசமாக வெற்றி பெற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்த இருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய முதல்வருக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் சமூகநீதி என்றால் என்னவென தெரியாத தமிழக அரசு இருக்கிறது. ஆனால், சமூகநீதியில் பிஎச்டி படித்திருக்கிறோம். சமூகநீதி என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ்தான். அவர் கொள்கைகளை கடைப்பிடித்து முன்னேறுவோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *