
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியைக் கூட குறைவாகத்தான் தான் விமர்சித்திருப்பார் ஸ்டாலின். அதைவிட பலமடங்கு அவர் வறுத்தெடுத்தது அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைத்தான்.
2021 பிப்ரவரியில் கோவைக்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார பயணம் வந்த ஸ்டாலின், “ 'ஊழலாட்சித் துறை' அமைச்சராக இருக்கும் வேலுமணி முன்பு எப்படி இருந்தார்… இப்போது எப்படி இருக்கிறார் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தையே இந்த கோவையில் நிறுவி உள்ளார். இதில் அவரது சகோதரர்கள், பினாமிகள் நீங்கலாக யாரும் உள்ளே நுழைய முடியாது. இவர்களின் ஊழல்களைக் கண்டுபிடிக்கும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்.