
1989-ல் பாமக என்ற கட்சியை தொடங்கிய போது, “எனது வாரிசுகள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ எந்தப் பொறுப்புக்கும் வரமாட்டார்கள். ஒருவேளை அப்படி நடந்தால் என்னை நடுரோட்டில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்” என்று சத்தியம் செய்த ராமதாஸ், இன்று சவுக்கடி பட்ட வேதனையில் இருக்கிறார்.
ராமதாஸ் பலமுறை கருணாநிதியின் வாரிசு அரசியலை வசைபாடி இருக்கிறார். இப்போது அதையெல்லாம் நினைவுகூரும் திமுக-வினர், “கட்சிக்குள் குடும்ப ஆதிக்கத்தை அனுதித்த கலைஞர் அதையெல்லாம் எப்படி சமாளித்தார் என்பதை அவரிடமிருந்து அய்யா ராமதாஸ் படித்துக்கொள்ள தவறிவிட்டாரே” என்று வருத்தப்படுகிறார்கள்.