• June 2, 2025
  • NewsEditor
  • 0

தரு​மபுரி / மேட்​டூர்: தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 3,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 5,000 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை பெய்​வ​தா​லும், கபினி அணையி​லிருந்து காவிரி​யில் தண்​ணீர் திறக்க வாய்ப்பு உள்​ள​தா​லும் வரும் நாட்​களில் ஒகேனக்​கல்​லுக்கு நீர்​வரத்து அதி​கரிக்க வாய்ப்பு உள்​ள​தாக நீர்​வளத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 2,913 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 3,017 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணையி​லிருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. தண்​ணீர் திறப்பை விட நீர்​வரத்து அதி​க​மாக உள்​ள​தால் அணை நீர்​மட்​டம் உயர்ந்து வரு​கிறது. இதனால் அணை நீர்​மட்​டம் 112.38 அடியி​லிருந்து 112.48 அடி​யாக​வும், நீர் இருப்பு 81.83 டிஎம்​சி​யில் இருந்து 81.98 டிஎம்​சி​யாக​வும் அதி​கரித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *